பருத்தித்துறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோரை தடுக்கும் வகையில் கடற்படையினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் கடல் வளங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, கடற்படையினால் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்கு வடக்கே மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இந்த கைது முன்னெடுக்கப்பட்டதுடன், இழுவை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.