பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சம்மந்தனின் இறுதி கிரியைகள்

8 2 பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சம்மந்தனின் இறுதி கிரியைகள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர், அமரர் இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியைகள் ஆரம்பமாகியுள்ளன.

திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று (07) மாலை இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதுடன் பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலித்தியும் வருகின்றனர்.

அரசியல் பிரமுகர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள் என பலரும் திருகோணமலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இறுதி கிரியை நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ள நிலையில், இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், வடகிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என பலரும் இதில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்படித்தக்கது.