பாடசாலை சமூகத்தை அச்சுறுத்தும் பொலிஸ் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

06 பாடசாலை சமூகத்தை அச்சுறுத்தும் பொலிஸ் - மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுபாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அச்சு றுத்துவதும் விசாரணைக்கு உட்படுத்துவதும் மனித உரிமை மீறல் எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், பொலிஸாரின் இத்தகைய செயற் பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியு றுத்தி மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடும் செய்துள்ளது.

மனித உரிமை ஆணைக் குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் இன்று காலை இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர். அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது்-

“கடந்த வாரம் நடைபெற்ற யாழ். தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டியின் இல்ல அலங்காரங்களில் மாணவர்களின் வெளிப்பாடுகள் தொடர்பாக தெல்லிப்பளைப் பிரிவு பொலிஸார் மாணவர்களையும், ஆசிரியர்களையும் விசாரணைக்கு அழைத்தமையும் விசாரணைக்கு உட்படுத்தியமையும் அடிப்படை மனித உரிமைகளை மீறு கின்ற நடவடிக்கையாகும்.

இலங்கை அரசமைப்பின் சட்ட வரையறைக்குட்பட்டு கருத்தியல் ரீதியாகவும் கலை ரீதியாகவும் குறியீட்டு வடிவங்கள் மூலமாகவும் பாடசாலை மட்ட இல்ல விளையாட்டு போட்டி அலங்காரங்களில் மாணவர்களின் பாட சாலை மட்ட வெளிப்பாடுகள் இலங்கை அரசமைப்பில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான சிந்தனை மற்றும் மனச்சாட்சி சுதந்திரத்துக்கு உட்பட்டதாகும்.

இத்தகைய சுதந்திரங்களை மதிக் காத தெல்லிப்பளை பொலிஸாரின் அச்சுறுத்தல்களுடன் கூடிய விசாரணை செயற்பாடானது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதுடன் பாட சாலை நிர்வாகத்தினருக்கும் அடக்கு முறைகளைப் பிரயோகிக்கின்ற செயற் பாடுகளாகும். கல்விச் செயற்பாடுகளில் தெல்லிப்பளை பொலிஸாரின் அவசியமற்ற நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டைக் கோருகின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.