இனப்படுகொலைக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூரில் சுழற்சிமுறை உணவுதவிற்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார் என்பவர் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை உட்பட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து அவர் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூரில் சுழற்சிமுறை உணவுதவிற்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் வேலன் சுவாமிகள், யாழ் மாவட்ட குரு முதல்வர், மதகுருக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்துகொண்டனர்.