மாத்தறை – பெலியத்த பகுதியில் இன்று னபலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அபே ஜன பல கட்சி தலைவர் சமன் பெரேராவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
டிபெண்டர் ரக வாகனமொன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து கெப்ரக வாகனமொன்றில் பிரவேசித்தவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதில் ஐவா் கொல்லப்பட்டனா்.
அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.