பொது ஜன பெரமுனவில் ரணில் போட்டியிட்டால் ஆதரவு – சாகர காரியவசம் தெரிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தால் அவருக்கு ஜனாதிபதி வேட்புமனுவை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தாம் குறிப்பிட்ட ஒருவரை முன்வைக்கவில்லை எனவும், எந்த நேரத்திலும் சரியான நபரை முன்வைக்கலாம் எனவும், தமது கட்சி மொட்டு சின்னத்திலே வேட்பாளரை முன்வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.