பொது வேட்பாளரை ஆதரிப்பதில்லை என்பது தமிழரசுக் கட்சியின் முடிவு – சுமந்திரன்

தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதில்லை என்பது இலங்கை தமிழ் அரசு கட்சியின் முடிவு என்று கூறியுள்ளார் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

தனியாா் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் கேள்விக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“தமிழ் பொது வேட்பாளரை இலங்கை தமிழ அரசு கட்சி ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளது. தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக நான் பிரசாரம் செய்வேன்” என்றும் அவர் கூறினார்.