பொது வேட்பாளா் குறித்து கட்சிகள் அறிவித்த பின்னா் பொது கட்டமைப்பு உருவாக்கப்படும் – சிவில் அமைப்புக்களின் கூட்டத்தில் முடிவு

WhatsApp Image 2024 06 05 at 6.37.32 PM பொது வேட்பாளா் குறித்து கட்சிகள் அறிவித்த பின்னா் பொது கட்டமைப்பு உருவாக்கப்படும் - சிவில் அமைப்புக்களின் கூட்டத்தில் முடிவுஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்து முடித்தவுடன் பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கி செயற்படுவது என வடக்கு கிழக்கு சிவில் சமூகங்களின் கூட்டடிணைவு தீா்மானித்துள்ளது.

குடிமக்கள் சமூகக் கூட்டிணைவின் வவுனியாத் தீர்மானத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பொதுச்சபைக் கூட்டம் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

அதில், இதுவரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவு என்று அழைக்கப்பட்ட தமிழ் குடிமக்கள் சமூகத்தின் கட்டமைப்பை இனிமேல், “தமிழ் மக்கள் பொதுச்சபை” என அழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்து முடித்தவுடன் பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கி செயற்படுவது என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

WhatsApp Image 2024 06 05 at 6.37.32 PM 1 பொது வேட்பாளா் குறித்து கட்சிகள் அறிவித்த பின்னா் பொது கட்டமைப்பு உருவாக்கப்படும் - சிவில் அமைப்புக்களின் கூட்டத்தில் முடிவுஅத்துடன் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கான ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட வழிகாட்டல் குழுவும் இருபத்தி ஐந்து பேரை உள்ளடக்கிய தலைமை ஒருங்கிணைப்புக் குழுவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. தலைமை ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து தமிழ் மக்கள் சபைக்குரிய செயற்குழுக்கள் தெரிவுசெய்யப்படும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதத்தின் இறுதி சனிக்கிழமைகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் மக்கள் பொதுச்சபை கூடி தேவையான முடிவுகளை எடுக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான அறிக்கையில் 83 அமைப்புக்கள் கைச்சாத்திட்டுள்ள.