மக்கள் முதலில் விரும்பும் தேர்தல் எது? கருத்து கணிப்பில் வெளியான தகவல்

இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்த விரும்புவதாக தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

லங்கா ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில், 20 சதவீத மக்கள் மட்டுமே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை விரும்புவதாக தெரியவந்துள்ளது.

சுமார் 81.9 சதவீத மக்கள் பொருளாதாரத்தை உற்பத்தி அடிப்படையிலான ஒன்றாக மாற்றுவதன் மூலமும், ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலமும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் என்று நம்புகிறார்கள்.

34.6 சதவீதம் பேர் மட்டுமே அமைப்பு மாற்றத்தை நம்புகிறார்கள், அதே நேரத்தில் 16.5 சதவீதம் பேர் கடுமையான சட்டங்களின் மூலம் நாட்டை மேம்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள் என குறித்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.