மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இலங்கையின் சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பொலிஸாரினால் தடை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு சிறு சமூக உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இவ்வாறான தடை உத்தரவுகளை இரவோடு இரவாக வீடுகளுக்கு சென்று பொலிஸார் வழங்கியுள்ளனர்.
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வெபர் மைதானம் காந்தி பூங்காவில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு மட்டக்களப்பு நீதவான நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.