மட்டக்களப்பு மாந்தீவில் சிறைச்சாலை அமைக்க திட்டம் – நேரில் பார்வையிட்ட நீதி அமைச்சர்

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகருக்கு அருகில் கடலில் அமைந்துள்ள மாந்தீவில் புதிய சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு நிலையத்தை நிறுவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாந்தீவை பார்வையிடுவதற்காக
சென்றிருந்த போதே அமைச்சர் இந்த தகவலினை தெரிவித்துள்ளார்.

மேலும், மாந்தீவு சுமார் 100 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாந்தீவில் தற்போது இரண்டு தொழுநோயாளிகள் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா காலத்தில் இலங்கை விமானப்படையால் கையகப்படுத்தப்பட்டு கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட விமானப்படை அதிகாரிகளை தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை வழங்கியதாகவும் மேலும் சிறப்பாக அங்கு பணியாற்ற முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சுகாதார அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தொழுநோயாளிகள் இருக்கும் இடத்துக்கு இரண்டு தொழு நோயாளிகளையும் மாற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்த இடத்தில் சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு நிலையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.