மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்ற எரிபொருள் கொள்கலன் – இருவர் காயம்

IMG 20240627 WA0019 மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்ற எரிபொருள் கொள்கலன் - இருவர் காயம்
திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை கண்டி பிரதான வீதியின் 98ம் கட்டை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (27) மாலை இடம் பெற்றுள்ளது .

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த எரிபொருள் கொள்வனவு வாகனமே இவ்வாறு வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றுள்ளது. நித்திரை கலக்கம் காரணமாக இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது. இதில் எரிபொருள் கொள்கலனை செலுத்திய சாரதி வயது (50), உதவியாளர் வயது (45) ஆகிய இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மதுகம பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

IMG 20240627 WA0018 மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்ற எரிபொருள் கொள்கலன் - இருவர் காயம்இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.