மன்னாரில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி – சிங்கள மக்களும் பருகினர்

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் – பள்ளிமுனை பெருக்க மரத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

இதன்போது மன்னார் மாவட்டத்தில் யுத்த காலத்தில் தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், முப்படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து மக்களுக்கு வழங்கினார்கள்.

2 மன்னாரில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி - சிங்கள மக்களும் பருகினர்பள்ளிமுனை மக்கள், இளைஞர்கள், யுவதிகள் உட்பட அதிகளவான மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்திச் சென்றனர். அதேநேரம் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட சிங்கள மக்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை ஆர்வத்துடன் அருந்தியமை குறிப்பிடத்தக்கது.