மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தொகுதியில் இருந்து தமிழரசுகட்சி சார்பாக பொதுத்தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்தப்படுபவர் யாராக இருந்தாலும் பேரினவாதகட்சிகளில் கடந்த காலத்தில் செயற்படாதவர்களாக இருக்கவேண்டியது அவசியம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்கடந்த 23இம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தின் பொது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சுட்டிக்காட்டினார்.
கட்சியில் கடந்த 2015இ தேர்தலில் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்பாளராகவும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராகவும் செயல்பட்ட எவரையும் தற்போதைக்கு தமிழரசு கட்சியில் வேட்பாளராக தெரிவுசெய்தால் தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக தமிழரசுகட்சி ஆசனம் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது என அவர் கடந்தகால நிகழ்வுகளை நினைவூட்டிப் பேசினார்.
அவர் கூறிய விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பகால தமிழரசு கட்சியாக செயல்பட்ட களுதாவளை ப.குணராசா என்பவர் கடந்த 2010இ பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
அவரை தமிழரசு கட்சிக்குள் உள்வாங்கி கடந்த 2012இ மாகாணசபை தேர்தலில் தமிழரசு கட்சி வேட்பாளராக நிறுத்தியபோது அவர் வெற்றியடையவில்லை இதற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கூறிய காரணம் ‘கடந்த தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் எலக்சன் கேட்டு தமிழ் வாக்குகளை சிங்கள கட்சிக்கு பெற்றுக்கொடுத்த ஒருவரைநாம் எப்படி ஆதரிப்பது’ என்பதே.
இதே போல் கடந்த 2008இ மாகாணசபை தேர்தலில் பிள்ளையானின் கட்சியில் TMVP கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பழுகாம்ம் வீ.ஆர்.மகேந்திரன் என்பவரை 2012இ மாகாணசபை தேர்தலில் தமிழரசு கட்சியில் உள்வாங்கி வேட்பாளராக நிறுத்தியபோது அவரும் தோல்வி அடைந்தார் அவரின் தோல்விக்கு மட்டக்களப்பு மக்கள் கூறிய காரணம் ‘ஏற்கனவே பிள்ளையானின் கட்சியில் தேர்தல் கேட்டதனால் அவரை நிராகரித்தோம்’ என்பதாகும்.
உண்மயில் களுதாவளை குணம்இ பழுகாம்ம் வீ.ஆர். மகேந்திரன் இருவரும் குறித்த தேர்தல்களின் போது தமிழ அரசு கட்சி உறுப்பினர்களாக இருந்த போதும் மக்கள் அவர்களை ஏற்காமைக்கான காரணம் மாற்று கட்சியில் வேட்பாளராக ஏற்கனவே போட்டியிட்ட ஒருகாரணம் என்பதே உண்மை.
அதே நிலையில் தற்போது பட்டிருப்பு தொகுதியில் தமிழரசு கட்சி சார்பாக வேட்பாளராக விண்ணப்பித்துள்ள சாணாக்கியன் என்பவர் கடந்த 2015இ ல் பொதுத்தேர்தலில் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வெற்றிலை சின்னத்தில் பிள்ளையான்இஹிஷ்புல்லாஇஅருண்தம்பிமுத்து இவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட ஒருவரை இம்முறை தமிழரசு கட்சி வேட்பாளராக நிறுத்தினால் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகட்சியில் இருந்து விலகிச்செல்லும் இதற்கான பாவமும் பழியும் தமிழரசு கட்சி தலைமை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அவர் இந்த கருத்துக்களை கூறும்போது மத்திய குழு உறுப்பினர்கள் 60இபேரும் அவரின் கருத்தை தலை அசைத்து ஆதரவு தெரிவித்தனர் வாலிபர் அணி தலைவர் சேயோன் கைதட்டி இந்த கருத்தை வரவேற்றதையும் காண முடிந்தது.
இதன்பின்பு உரையாற்றிய மட்டக்களப்பு எம்.பி.ஶ்ரீநேசன் அரியநேத்திரன் கருத்தை ஆதரித்ததுடன் இம்முறை தனித்தனியாக வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதை விட்டு கூட்டாக மூன்றுபேர் இணைந்து தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளாவிட்டால் தமிழரசு கட்சியின் உறுப்பினர் தொகை குறையும் நிலை ஏற்படும் குறிப்பிட்டார்.
சம்பந்தன் மாவைசேனாதிராசா துரைராசசிங்கம் மூவரும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்தனர் எனவும் மத்திய குழுவில் கலந்துகொண்ட கட்சி பிரமுகர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்