மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் திருகோணமலையில் திறந்து வைப்பு!

கிழக்கு மாகாண வரலாற்றில் மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை டச்பே (DUCHBAY) கடற்கரையில் இந்த கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 24ஆம் திகதி இரவு இடம்பெற்ற விசேட சமய ஆராதனை நிகழ்வுகளில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டிருந்தார்.

திருகோணமலை டச்பே (DUCHBAY) கடற்கரையில்  அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தின் முன்னிலையில் இதுவரை 10ஆயிரத்துக்கும் அதிகமானோர் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டுள்ளனர்.

இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரள,மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க,மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி உட்பட திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

trinco மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் திருகோணமலையில் திறந்து வைப்பு!