மியான்மரில் ஏற்பட்டுள்ள இராணு ஆட்சிக்கு எதிர்ப் தெரிவித்து மக்கள், தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமையன்று மாண்டலேவில் நடந்த போராட்டத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல் மியான்மரின் தெற்கு நகரான பியாய் நகரில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். இதேபோல் நேற்று முன் தினம் நடந்த போராட்டத்தில் யாங்கூனில் 3 பேர் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இரவு நேர போராட்டங்களில் காவல்துறையும், இராணுவமும் கடுமையாக மக்களிடம் நடந்துகொள்கின்றன என்று போராட்டக்காரர்கள் சிலர் கூறியுள்ளனர். சுமார் 2000ம் பேர் வரையில் கைது செய்துள்ளது காவல்துறை.
இதுபோல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவர் தெகெட்டா டவுன்ஷிப் பகுதியில் உயிரிழந்ததாகவும் செய்திகள் பரவியுள்ளன. மியான்மருக்கான ஐநா மனித உரிமைகள் ஆணைய அதிகாரி டாம் ஆண்ட்ரூஸ், ‘இதுவரை போராட்டக்காரர்களில் 70 பேர் கொல்லப்பட்டிருக்கலாம்’ என்று கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.