முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட அவர், ஐக்கிய இராணுவ வீரர்கள் சக்தியின் பிரதானியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் இன்றைய(17) தினம் நியமிக்கப்பட்டார்.