முள்ளிப்பொத்தானையில் தாய், மகள் மீது கத்திக்குத்து நடாத்தி பெண் வேசம் போட்டு தப்பிக்க முயன்றவர் கைது

IMG 20240627 WA0008 முள்ளிப்பொத்தானையில் தாய், மகள் மீது கத்திக்குத்து நடாத்தி பெண் வேசம் போட்டு தப்பிக்க முயன்றவர் கைது
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் பகுதியில் தாய், மகள் இருவரையும் கத்தியால் தாக்கி விட்டு ஹபாயா அணிந்து பெண் வேசம் போட்டு தப்பிக்க முயன்றவரை தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர் னர்.

குறித்த சம்பவம் நேற்று (26)மாலை இடம் பெற்றுள்ளது. இக் குறித்த சம்பவத்தில் தாக்குதல் நடாத்திய வயது (38) குடும்பஸ்தர் ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு தாக்குதளுக்கு உள்ளன தாய் வயது (54) ,மகள் வயது (31) ஆகிய இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தாய் மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்கும் மகள் கந்தளாய் தளவைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

IMG 20240627 WA0006 முள்ளிப்பொத்தானையில் தாய், மகள் மீது கத்திக்குத்து நடாத்தி பெண் வேசம் போட்டு தப்பிக்க முயன்றவர் கைதுகுறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த ஈச்ச நகர் பகுதியில் குறித்த தாயிடம் கடனுக்கு பணம் வாங்கிய நிலையில் அதனை மீளப் பெறுவதற்காக தாக்குதல் தாரியின் கையடக்க தொலைபேசி திருத்த கடைக்கு சென்று கேட்டுள்ளார்.

இதனை பொருட்படுத்தாது உரிய தாயின் வீட்டுக்கு சென்று கத்திக் குத்து தாக்குதலை நடாத்தி விட்டு தப்புவதற்காக முகத்தை மூடி ஹபாயா அணிந்து வெளியே தப்பித்துக் கொள்ள முயற்சித்த நிலையிலையே மூதூரை பிறப்பிடமாகவும் ஈச்ச நகர் பகுதியில் திருமணம் முடித்து வசித்து வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவ இடத்துக்கு தம்பலகாமம் பொலிஸார் சென்று உரிய தாக்குதலை மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்