யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடா்பில் லண்டனில் ஒருவா் கைது

யாழ்ப்பாணத்தில் 2001ம் ஆண்டு அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் லண்டனில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாா். தமிழ் மக்களிடமிருந்து மேலதிக தகவல்களை மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் கோரியுள்ளனர்.

2001 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2000ம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்துடன் தொடர்புடைய யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பயங்கரவாத
எதிர்ப்பு துப்பறியும் பிரிவினரின் விசாரணைகளிற்கு உதவக்கூடிய தகவல்கள் உள்ளவர்களை விசாரணைக்கு உதவுமாறு லண்டன் மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த இரண்டாவது நபரை கைதுசெய்துள்ள நிலையிலேயே இந்த வேண்டுகோள் வெளியாகின்றது.
இந்த குற்றங்கள், பாதிக்கப்பட்டவர்களிற்கும் சாட்சிகளிற்கும் நிரந்தர பாதிப்பைஏற்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ள லண்டன் மெட்ரோ பொலிஸ் தளபதி டொமினிக் மேர்பி, இது குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக இருவரை இதுவரை கைதுசெய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த பாரதூரமான குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளில் முன்னேற்றங்களை சந்தித்துள்ளனர் என்பதற்கான அறிகுறி இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.