யாழ். நோக்கி வந்த பஸ்ஸூடன் நேருக்கு நோ் மோதிய ஓட்டோ – இரு இளைஞா்கள் உயிரிழப்பு

6 1 யாழ். நோக்கி வந்த பஸ்ஸூடன் நேருக்கு நோ் மோதிய ஓட்டோ - இரு இளைஞா்கள் உயிரிழப்புஅனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பாதெனிய பிரதான வீதியில் இன்று காலை தனியார் பஸ்ஸூம் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடியாவ பிரதேசத்தில் வசிக்கும் 24 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் தலாவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுற்றுலா வந்து கொண்டிருந்த பஸ்ஸூம், அனுராதபுரத்தில் இருந்து தலாவ நோக்கிப் பயணித்த ஓட்டோவும் நேருக்கு நேர் மோதியதாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டோ வீதிக்கு எதிர்ப்புறம் வந்த பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அனுராதபுரத்தில் நேற்று இரவு இடம் பெற்ற பொசன் கொண்டாட்டத்தில் கலந்து விட்டு ஓட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்களே விபத்தில் சிக்கியுள்ளனர்.

பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.