ரணிலின் அறிவிப்பின் பின்னரே பொதுஜன பெரமுனவின் முடிவு – மகிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்பாளரை அறிவித்ததன் பின்னர் பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளரை தமது கட்சி முன்னிறுத்தப் போவதாக வெளியாகும் வதந்திகளில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் மகிந்த ராஜபக்ஷ அது வதந்தி என குறிப்பிட்டுள்ளார்.