தமிழகத்தின் புதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இலங்கையின் ராஜபக்ஷ அரசாங்கத்துடன் நட்புறவுடன் கூடிய உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் இந்திய மத்திய அமைச்சரும் ஜனதா கட்சித் தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியிருக்கின்றார்.
இது தொடர்பில் தனது ருவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இதில் “திமுக.வின் பல தலைவர்களுடைய சொத்துக்கள் தென்னிலங்கையில் உள்ளன” எனவும் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டிருக்கின்றார்.