பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் கடந்து கொண்டிருந்த ஹைஏஸ் வானை ரயில் மோதித் தள்ளியதில் தந்தை ஒருவரும் அவரின் 6 மாத குழந்தையும் பலியாகினர். குழந்தையின் தாய் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று மாலை 6.45 மணியளவில் இணுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலுடனேயே ஹைஏஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஆனந்தராசா சயந்தன் (வயது 32) அவரின் மகளான அப்சரா என்ற 6 மாத குழந்தையும் உயிரிழந்தனர்.
குழந்தையின் தாயான சயந்தன் பிரியங்கா (வயது 22 என்பவர் படுகாயமடைந்து யாழ். போதனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸார் விபத்துக் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.