விஜயகாந்துக்கு இலக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துநிற்கின்றது

முன்னனி திரைப்பட நடிகரும், அரசியல் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவருமான, ஈழத்தமிழர்களுக்காக தொடாந்து குரல் கொடுத்து வந்தவருமான விஜயகாந்த என்ற நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி அவர்கள் கடந்த வியாழக்கிழமை(28) காலமாகிவிட்டார்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனழிக்காததால் மரணமடைந்துள்ளார்.

திரையுலகில் முன்னனி நடிகர் மட்டுமல்லாது, தயாரிப்பாளர், இயக்குனர் என பல துறைகளில் அவர் பணியாற்றியவர். 1979 ஆம் ஆண்டு அகல்விளக்கு என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகிய அவர் 2015 ஆம் ஆண்டுவரை 150 இற்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு புரட்சிக் கலைஞர் மற்றும் கப்டன் என்ற பட்டங்களும் திரைப்படத்துறையில் வழங்கப்பட்டிருந்தது.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த அவர் 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தமிழக சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றிபெற்றிருந்தார்.

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி நிலைக்கும் தனது கட்சியை அவர் உயர்த்தியிருந்தார். ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கான தொடர்ந்து எந்தவித தன்னலமும் இன்றி அவர் குரல் கொடுத்து வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அவரின் இந்த மறைவுக்கு ஈழத்தமிழ் மக்கள் சார்பில் இலக்கு தனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றது.