விமான நிலையத்திலிருந்து தப்பியோடிய இரு பயணிகளை தேடும் அவுஸ்திரேலியா

விமானநிலையத்திலிருந்து தப்பியோடிய இரு பயணிகளை அவுஸ்திரேலிய காவல்துறை  தேடி வருகின்றது.
கன்பரா வழியாக மெல்பேர்ன் விமான நிலையத்தில் வந்திறங்கிய நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த இரண்டு பயணிகள், விமான நிலைய அதிகாரிகள் விடுத்த தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி அங்கிருந்து சென்று அவர்களுக்காக வெளியில் காத்திருந்த வாகனத்தில் ஏறி தப்பியோடியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தப்பியோடியவர்களை அறிந்தவர்கள் தங்களுக்கு தகவல் தருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.