வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக ஆறு கோடி மோசடி – பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி சுமார் 06 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிலரை பெரும் மோசடி செய்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தததாகவும் அம்முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணொருவரை கைது செய்தனர் .
குறித்த பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அந்த பெண்ணினை வழிநடத்தி , மோசடிகளில் ஈடுபட்டவர் எனும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.