பொருளாதார நெருக்கடி இலங்கையின் முதுகெலும்பை முறிக்கவில்லை -எரிக்சொல்ஹெய்ம்

இலங்கை மக்களிற்கே உரிய மிக கடினமான நெருக்கடிகளில் இருந்து மீளும்திறன்  காரணமாக கடந்த வருடத்தின் பொருளாதார நெருக்கடி இலங்கையின் முதுகெலும்பை முறிக்கவில்லை என நோர்வேயின் முன்னாள் அமைச்சர்  எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இணையவழி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த வருடம் அசாதாரண பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவேளை அது இலங்கை மக்களின் முதுகெலும்பை முறிக்கும் என பலர் நினைத்தனர் என  எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை மக்களிற்கே உரிய மிகவும்  நெருக்கடியிலிருந்து மீளும் திறன் காரணமாக இது சாத்தியமாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அதன்காரணமாக இலங்கையால் அந்த நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னோக்கி செல்வது குறித்து சிந்திக்க முடிகின்றது எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலை உருவாகுவதற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவினதும் ஏனையவர்களினதும் தலைமைத்துவமே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அற்புதமான தீவுக்கான மகத்தான வாய்ப்புகளை ஆராயும் தருணம் தற்போது வந்துள்ளது மீள்புதுப்பிக்கத்தக்க சக்திதுறைமற்றும் சுற்றுலாத்துறை ஆகியன அதிக திறன் கொண்ட துறைகளாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.