13ஆவது திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும்-ஜனாதிபதி

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமானதல்ல என்றும் இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார். 

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (26) மாலை இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.