22 ஆவது திருத்த வா்த்தமானி தோ்தல் செயற்பாட்டை பாதிக்காது – தேர்தல் ஆணையாளர் நாயகம்

அரசமைப்பின் 22வது திருத்தம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தடைப்படாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலம் ஜனாதிபதியின் பணிப்புக்கமைய வர்த்தமானி அறிவித்தலில் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் அரசியலமைப்பின் ஏற்பாட்டில் காணப்படும் குறைபாட்டை திருத்தும் வகையில் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை 22 ஆவது திருத்த சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட வேண்டாம் என தான் நீதியமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்த நிலையில் ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய சட்டமூலம் இன்று வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.