ஜனாதிபதி தேர்தர்லுக்கான கண்காணிப்பில் 8000 பேர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 8,000 உள்ளுர் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரோஹன ஹெட்டி யாராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பைச் சேர்ந்த கணக்கெடுப்பு குழுக்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முன் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொது நலவாய நாடுகளின் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.