கிளிநொச்சி முட்கொம்பன் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் போதைப் பொருளை கட்டுப்படுத்துமாறு கோரியும் குறித்த பிரதேசத்தில் காவல்துறையினர் காவலரண் அமைக்க கோரியும் இன்று (31) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட முட்கொம்பன் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள ஐந்துக்கு மேற்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வரும் மக்கள், சட்ட விரோத கசிப்பு உற்பத்தி மற்றும் போதைப் பொருள் பாவனை என்பவற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று பகல் 10.30 மணிக்கு முட்கொம்பனில் நடைபெற்றுள்ளது.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுவர்கள் மீதான துஷ்பிரியோகங்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு போன்ற விடயங்களில் உரிய தரப்புகள் கவனம் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.