யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்து தீப்பிடித்து முற்றாக எரிந்தது

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. 

இதன்போது, குறித்த பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக  காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் எருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.