போருக்கும், அமைதிப் பேச்சுக்கும் வெவ்வேறு காலங்கள் உள்ளன – நெத்தனியாகு

மூன்றாவது கட்ட நடவடிக்கையை படையினர் ஆரம்பித்துள்ளதாகவும், போருக்கும், அமைதிப் பேச்சுக்கும் வெவ்வேறு காலங்கள் உள்ளதாகவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு தெரிவித்துள்ளார். நல்ல எதிர்காலத்தை உருவாக்க போர் அவசியம் எனவும், தற்போதுவரையிலும் ஹமாஸ் படையினரின் 10 விகிதமான பலம் அழிக்கப்பட்டுள்ளதகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், காசாவில் உள்ள மக்களை எகிப்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தத்தை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் எகிப்த்துக்கு வழங்கவேண்டும் என தெத்தன்யாகு அழுத்தம் கொடுத்து வருவாதாக பைனான்சியல் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. நான்கு கட்டங்களாக மக்களை எகிப்த்தின் சினை குடாவுக்கு நாடுகடத்தும் திட்டத்தை இஸ்ரேல் கொண்டிருப்பதாக இஸ்ரேலிய புலானய்வுத்துறையை மேற்கோள் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.