லண்டனில் ‘எஸ்தி 50’ நூல் வெளியீடு

இலங்கையின் மூத்த ஊடகவியராளரான ‘எஸ்தி’ என அறியப்படும் எஸ். திருச்செல்வத்தின் 50ஆண்டு ஊடக சேவையின் பரிமாணங்களை கூறும் துறைசார் பிரமுகர்களின் கட்டுரைகள் அடங்கிய ‘எஸ்தி 50’ என்ற நூல் லண்டனிலும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

இலங்கையில் இந்தியப் படையினர் நிலை கொண்ட காலத்தில் பெரும் அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்த எஸ். திருச்செல்வம் அவர்கள் தனது ஒரேயொரு புதல்வனான அகிலனை இந்தியப் படையினருடன் செயற்பட்ட ஆயுததாரிகள் படுகொலை செய்த பின்னர் கனடாவிற்குப் புலம் பெயர்ந்தார். அங்கும் அவர் தனது ஊடகப் பணியைத் தொடர்ந்தார்.

அவரது ஊடகப் பணியின் ஆளுமையைக் கூறும் இந்த நூல் ஒக்டோபர் 13அன்று மாலை 6 மணிக்கு ஹரோ, சிவிக் சென்ரரில்(Harrow civic centre – Station Road HA12XY) இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஊடகத்துறை சார் பிரமுகர்களின் உரைகளும் இடம்பெறவுள்ளன.