இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது

பொலீசார் நமது மக்களை அச்சுறுத்தும் படியாக புலனாய்வு பிரிவினர் படங்களையும் வீடியோக்களையும் எடுத்து எங்களை அச்சுறுத்தும் இந்த செயல்பாடானது ஜனநாயக நாடு என்று சொல்லும் இந்த இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதாக தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் சி.நிதர்சன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்று வனவிலங்கு பாதுகாவலர்களும் போலீசாரும் இணைந்து மிகவும் அராஜகமான ஒரு செயலை எமது துயிலும் வீரர்களுக்காக கட்டப்பட்ட அந்த நினைவு தூபியினை உடைத்து உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

மிகவும் எங்கும் நடக்காத ஒரு அராஜகமான செயலை இன்று இந்த வன பாதுகாவலர்களும் வாழைச்சேனை போலீசாரும் சேர்ந்து இந்த செயலை மேற்கொண்டுள்ளனர் உண்மையில் மனது வலிக்கின்றது ஏன் இவ்வாறானதோர் செயலை அதுவும் ஒரு புனிதர்கள் இடம் உறங்கும் இடத்தை இவ்வாறு துவம்சம் செய்து அடித்து உடைத்து இப்படிப்பட்ட மிலேட்சத்தனமான வேலையினை இவர்கள் செய்து அத்தோடு இன்று 23ஆம் தேதி சந்திவெளி பிரதேசத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு செய்வதற்காக எமது அணி அங்கு சென்றிருந்தது இரவில் இருந்து காலை வரை போலீசாரை கொண்டு வந்து குவித்து மண்ணுக்காக மடிந்த அந்த வீரர்களின் பெற்றோர்கள் உணவை கொடுத்து அவர்களை கௌரவிப்பதற்கு கூட போலீசார் வந்து இடம் தரவில்லை.

இவ்வாறு இன்னமும் என் மீது அராஜகத்தினை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது இதை யார் கேட்பது? இதற்கான பதில் என்ன? முடிவு தான் என்ன இவ்வாறு நடந்து கொண்டிருந்தால்? மக்கள் ஒன்று கூட வேண்டும் மக்கள் எழுச்சி கொள்ள வேண்டும் 27 ஆம் தேதி நாங்கள் அங்கு விளக்கேற்றுவோம் இதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை அனைத்து மக்களும் அங்கு வரவும் என்ன நடந்தாலும் தரவை மாவீரர் டூயலும் இல்லை ஏற்பாட்டு குழு அங்கு விளக்கு ஏற்றும் என்பதனையும் உங்களுக்கு சொல்கின்றோம்.

சகல ஏற்பாடுகளும் கிரான் சந்தியில் இருந்து தரவை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு உங்களை அழைத்துச் செல்வதற்கான ஊர்திகள் அங்கு தரித்து நிற்கும் எந்த நேரமும் நீங்கள் அந்த இடத்திற்கு வந்து போகலாம் என்பதனையும் ஏற்பாட்டுக் குழுவாகிய நாங்கள் தெரியப்படுத்துகின்றோம்.

அத்தோடு இன்று நடந்த இந்த சம்பவம் எமது மக்களையும் எமது இதயத்தையும் புன்னாக்கி உள்ளது மிலேட்சத்தனமான செயலை இந்த அரசாங்கம் செய்திருக்கின்றது இது நமது மட்டக்களப்பு மக்கள் மீது விழுந்த பேரிடி இந்த துயிலும் இல்லத்தில் விழுந்தது என்பதனை நான் உங்களுக்கு கூறுகின்றேன்.

இதனை இவ்வாறு விட்டுக் கொண்டிருக்க முடியாது நாங்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் எமது அந்த வீரர்கள் துயிலும் இடம் என்பதனை விட தமிழர்களுக்கான கோவில் அது அந்த கோவிலை எவரும் வந்து தொட்டுச் செல்வதற்கு இடம் அளிக்கக்கூடாது என்பதோடு உங்களுக்கான 27ஆம் தேதி புனிதர்களை வழிபடும் அந்த நாளை முன்னிட்டு சகல ஏற்பாடுகளும் நாங்கள் செய்து உள்ளோம்.அனைவரும் இந்த மாவீரர்களை ஈன்றெடுத்த பெற்றோர்கள் அங்கு வந்து சேர வேண்டும்.

அத்தோடு இன்று இந்த போலீசார் நமது மக்களை அச்சுறுத்தும் படியாக புலனாய்வு பிரிவினர் படங்களையும் வீடியோக்களையும் எடுத்து எங்களை அச்சுறுத்தும் இந்த செயல்பாடானது ஜனநாயக நாடு என்று சொல்லும் இந்த இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா இல்லையா என கேள்விக்குறியாகின்றது.

இந்த நாட்டில் வாழும் தமிழர்களாகிய எங்களுக்கு இவ்வாறான நெருக்கடியை மீண்டும் மீண்டும் இந்த அச்சுறுத்தலை கொடுத்துக் கொண்டு வருகின்றார்கள் இதனை புலம்பெயர் தேசத்தில் வாழும் நமது உறவுகள் இதனை கண்டு கொள்ளாமல் இருக்காமல் இதற்காக சர்வதேச ரீதியாக உங்களது முயற்சிகளை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்