சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழு காரியாலயம் முன் கவனயீர்ப்பு போராட்டம்.
சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று (10)திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது.
வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் சங்கம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர். நீதியான சர்வதேச பொறிமுறை விசாரனை தேவை உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமைகள் தினம் எமது உறவுகளை காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்கள் கடக்கின்றது நீதி இல்லை இதனால் எதற்கு இந்த மனித உரிமைகள் தினம் என இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் உறவினர்கள் இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததுடன் பல பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.