நோய் தாக்கம் காரணமாக நெற் செய்கை பாதிப்பு

திருகோணமலை_தம்பலகாமம் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட விவசாயிகள் பல இடர்பாடுகளை எதிர்நோக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர். தற்போது பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் உரிய நேரத்துக்கு உரப் பசளை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

பாலம்போட்டாறு பகுதியை அண்டிய விவசாயிகள் தங்களது நெற் செய்கையின் போது அரக்கொட்டியான் தாக்கம்,ஒரு வகை மஞ்சல் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதனால் விளைச்சல் குறைவாகிடுமோ எனவும் அங்கலாய்க்கின்றனர் இதன் காரணமாக அதிக விலையை கொண்ட எண்ணெயை வாங்கி அடித்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படுவதாகவும் இதனை அதிக விலை கொடுத்து வாங்கி நஷ்டமடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.