வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இன்று மாலையில் யாழில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துகின்றார்.
பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே அண்மை நாட்களாக வடக்கு முழுவதும் சூறாவளியாக சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதியும், வடக்கு ஆளுநருமான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இன்று(12) யாழ். வருகின்றார்.
மாலை 4 மணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடுகின்றார்.
யாழ். மாநகரசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவின் இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறும்.