சீனாவின் ஆய்வுக்கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு

சீனாவின் மற்றுமொரு கப்பலுக்கு ஆய்வுக்கான அனுமதியை வழங்க இலங்கை அரசு மறுத்துள்ளதாக இலங்கை அரசின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். என்ற இந்த கப்பல் எதிர்வரும் மாதம் 4 ஆம் நாள் இலங்கை வர தீர்மானித்திருந்தது.

நவீன ஆராய்ச்சிகப்பலான சியாங் ஜாங் ஹொங் 3 ஜனவரி மாதம் முதல் மே மாதம் முதல் இந்து சமுத்திரத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளது இலங்கை மாலைதீவு கடற்பரப்பில் இந்த கப்பல் ஆராய்ச்சிகளில் ஈடுபடும்.

இதேவேளை சீனாவின் இந்த கப்பலிற்கு அனுமதி வழங்குவதுகுறித்து  இந்தியா இலங்கை மாலைதீவிடம் தனது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது என  இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.