பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிக்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இன்று (21) பிரதேச செயலக வளாகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

மகளிர் , சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல்  அமைச்சின் கீழ்பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் விதவைகளுக்கான‌ சுய தொழில் திட்டத்தின் கீழ் 07 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது

.வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அதன் மூலம் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இத் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகாறது.

இதில் கணக்காளர் ,நிர்வாக உத்தியோகத்தர்,தலைமை முகாமையாளர்கள்,பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.