வட்டுக்கோட்டை இளைஞரின் மரணம் மனித ஆட்கொலை – யாழ். நீதிமன்றம் கட்டளை

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞரின் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ். நீதிவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞர் பொலிஸாரின் சித்திரவதைகளுக்குள்ளான நிலையில் கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி உயிரிழந்தார். அது தொடர்பான வழக்கு விசாரணை யாழ். நீதிவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.

மேற்படி வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இளைஞரின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றுக்குக் கிடைக்கப்பெற்றது. அதில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட காயங்கள் இளைஞரின் உடலில் காணப்பட்டன எனவும், இதனால் உயிரிழப்பு நேர்ந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்கு விசாரணைகளில் 21 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இளைஞரின் உயிரிழப்பு, “மனித ஆட்கொலை” என்று நீதிவான் மரண விசாரணை கட்டளையின் போது குறிப்பிட்டார்.

மேலும் இரண்டாவது சாட்சி ஐந்து பொலிஸார் சித்திரவதை செய்தனர் என்று தெரிவித்த நிலையில், இதுவரையில் நால்வரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றைய சந்தேகநபரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு இந்த வழக்கின் விசாரணைப் பொறுப்பதிகாரிக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன் மேற்படி குற்றத்தில் பொலிஸார் ஈடுபட்டிருப்பதால் நீதிமன்றக் கட்டளையின் பிரதியைப் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்புமாறும் மன்று கட்டளையிட்டது. மேலும், குறித்த வழக்கு விசாரணை ஆவணங்களைச் சட்டமா அதிபர்கத்தர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் நீதிவான் நீடித்துள்ளார். திணைக்களத்துக்குப் பாரப்படுத்துமாறும் நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிவான் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் நீதிவான் நீடித்துள்ளார்.