கடும் பாதுகாப்புடன் யாழ். வந்த ஜனாதிபதி – ஆா்ப்பாட்டம் செய்த மூவா் அதிரடியாகக் கைது

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையை எதிா்த்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் வீதிகளில் வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டு முழுமையாக காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர் கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வருகைதரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றாா்.