விட்டுக் கொடுக்க மூவரும் தயாரில்லை; தமிழரசு தலைவா் தெரிவு 21 இல் நடக்கும்

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்தரன், சீ.யோகேஷ்வரன் ஆகியமூவரும் இன்று காலை 10.45 மணிக்கு மாதிவெல சிறிதரன் விடுதியில் கூடி பேசினர்.

எவருமே வேட்பாளர் தெரிவில் இருந்து ஒருவருக்கு விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அவரவர் பக்க நியாயங்களை கதைத்தனர்.

எனவே எதிர்வரும் 21 ஆம் திகதி திருகோணமலையில் பொதுக்குழு கூட்டத்தில் ஜனநாயக முறையில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளது.