வலைகளை அறுத்து இந்திய மீனவர் அடாவடி

f111 வலைகளை அறுத்து இந்திய மீனவர் அடாவடிபருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை படகுகளால் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டு நாசமாகின என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் இரவு பருத்தித்துறை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர். இதன்போதே பருத்தித்துறை, இன்பருட்டி, சுப்பர்மடம், சக்கோட்டை மீனவர்களின் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து அழிக்கப்பட்டன.

நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட இழுவைப் படகுகளில் அத்துமீறி வந்த இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட னர். இவர்கள் சுமார் 3 கிலோ மீற்றர் நீளப்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போதே, 10 பேருக்கு
சொந்தமான வலைகளை இந்திய மீனவர்கள் அறுத்துச் சென்றனர் என்று பருத்தித்துறை மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.