யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை – குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் எட்டுப்போ் படுகாயமடைந்துள்ளதாகவும் அம்புலன்ஸ் வண்டிகள் அப்பகுதிக்கு வந்து காயமடைந்தவா்கள் ஏற்றிச் சென்று யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.