அரசமைப்பை மீறியுள்ளாா் சபாநாயகா் – குற்றஞ்சாட்டுகிறது தேசிய மக்கள் சக்தி

Tilvin.600 300 அரசமைப்பை மீறியுள்ளாா் சபாநாயகா் - குற்றஞ்சாட்டுகிறது தேசிய மக்கள் சக்திபொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோனை நியமித்ததன் மூலம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன அரசமைப்பை மீறியுள்ளார் என தேசிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளதுடன் இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் செல்வதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்பு பேரவையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்ட பின்னரும் சபாநாயகர் தேசபந்து தென்னக்கோனின் நியமனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார் என தெரிவித்துள்ள டில்வின் சில்வா இது அரசமைப்பிற்கு முரணாண அதனை மீறும் விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.வாக்களிப்பில் சமநிலை காணப்பட்டால்தான் சபாநாயகரால் வாக்களிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்..

பொலிஸ்மா அதிபர் நியமனத்தினால் பிரச்சினை உருவாகியுள்ளது உயர்நீதிமன்றம் இதற்கு தீர்வை காணும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.