தமிழரசுக் கட்சிக்கு எதிரான யாழ். வழக்கு மே 25 இற்கு ஒத்திவைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் யாப்பு விதிகளை மீறி மாநாட்டை நடத்துவதற்கு எதிகாகக் கட்சி உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியனால் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்காளி சார்பில் சட்டத்தரணி கு.குருபரனும், தமிழரசுக் கட்சி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறிகாந்தாவும் முன்னிலையாகியிருந்தனர். யாழ். மாவட்ட நீவான் சதீஸ்கரன் வழக்கைஎதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.