அத்துமீறிய மீன்பிடியை கட்டுப்படுத்தாவிடின் 25ஆம் திகதிக்கு பின்னர் மாபெரும் போராட்டம் – தீவக கடற்றொழிலாளர்

3 13 09 அத்துமீறிய மீன்பிடியை கட்டுப்படுத்தாவிடின் 25ஆம் திகதிக்கு பின்னர் மாபெரும் போராட்டம் - தீவக கடற்றொழிலாளர்இந்திய அத்துமீறிய மீன்பிடியை கட்டுப்படுத்தாது விடின் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தீவக கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடி படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி நேற்று செவ்வாய்க்கிழமை தீவகத்தின் வேணைப் பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் கண்டன ஆா்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. அத்துடன், அவர்கள் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்திடம் மனு ஒன்றையும் வழங்கினர்.

அந்த மனுவில், தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் எமது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்திய மீனவர்களின் படகுகளை தடுத்து நிறுத்துமாறு இலங்கை மற்றும் இந்திய அரச உயர் மட்டம் வரை மனுக்களை கையளித்தது மட்டுமல்லாது கண்டன போராட்டங்களையும் மேற்கொண்டோம்.

ஆனால், எமது கோரிக்கை தொடர்பில் இந்திய அரச உயர் மட்டம் இது வரை சாதகமான பதில் எதுவும் வழங்கவில்லை. ஆகவே, எமது கோரிக்கை அடங்கிய மனு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் வழங்கியுள்ளோம். எமது மனுவுக்கான பதிலை எதிர் வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் வழங்காத சந்தர்ப்பத்தில் 25ஆம் திகதிக்கு பின்னர் மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.