இராணுவ உயர் பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பியது சீனா!

தெற்காசிய நாடுகளுடனான பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி வருகிறது சீனா. இதற்காக தனது இராணுவத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை இலங்கை, மாலைதீவு நேபாளத்துக்கு அந்த நாடு அனுப்பி வைத்துள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கை தெற்காசியாவில் சீன மூலோபாய போட்டியாளரை எதிர்கொள்வதற்கான உந்துதலின் முக்கியமான நகர்வாக கருதப்படுகிறது. சீனாவுடன் ‘இராணுவ உதவி” ஒப்பந்தத்தில் மாலைதீவு கடந்த வாரத்தில்
கைச்சாத்திட்டிருந்தது. மறுபுறம் மாலைதீவில் மூலோபாய தீவுக்கூட் டத்தில் நிலைகொண்டிருந்த இந்திய படைகளை வெளியேற உத்தரவிடப்பட்டது.

இதேவேளை, இலங்கை, நேபாளத்துக்கு செல்வதற்கு முன்னர் இந்த உயர் மட்ட இராணுவ குழு சீன சார்பு மாலை தீவு ஜனாதிபதியான மொஹமட் முய்சுவை சந்தித்துள்ளது. இதனை, பீஜிங் பெய்ஜிங் கடந்த புதன்கிழமை உறுதி செய்தது.

இவ்வாறானநிலையில் குறித்த மூன்று நாடுகளிலும் இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் பிராந்திய பாதுகாப்பு பிரச்னைகள் பற்றிய விடயங்கள் தொடர்பில் கருத்துகளை பரிமாறவும் இதேநேரத்தில், சீன இராணுவத்தின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புத் துறையின் அதிகாரிகளின் பிரதிநிதிகள் குழு இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றிய ஆழமான ஆலோசனைகளில் கவனம் செலுத்தியுள்ளது.

இந்து சமுத்திரத்தில் இலங்கையில் சீனாவின் வளர்ந்து வரும் இருப்பு மற்றும் மாலைதீவில் அதன் செல்வாக்கு ஆகியவற்றில் இந்தியா சந்தேகம் கொள்கிறது. அத்துடன், கிழக்கு – மேற்கு சர்வதேச கப்பல் வழித்தடத்தில் இந்தத் தெற்காசிய தீவு நாடுகள் இரண்டுமே மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றன.

பீஜிங் நேபாளத்துடனும் நெருங்கிய உறவை கொண்டுள்ளது. எனவே, இந்து சமுத்திரம் நோக்கிய சீனாவின் எதிர்கால பார்வையின் முக்கிய நகர்வாகவே சீன இராணுவ குழுவின் இந்தப் பயணம் கருதப்படுகின்றது.