பாடசாலை நிகழ்வுகளில் பொலிஸ், இராணுவ தலையீடு – ஆசிரியர் சங்கம் கண்டனம்

பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிஸார், புலனாய்வாளர்கள், இரா ணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயல்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் தீபன் திலீசன் வெளியிட்ட செய்திக் குறிப் பில் இவ்விடயம் தெரிவிக் கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக் கப்பட்டவை வருமாறு,

பாடசாலைகளில் நடைபெற்றுவரும் இல்ல விளையாட்டு நிகழ்வுகளில் அலங்கரிப்பு செயல்பாடுகள் தொடர்பாக – குறிப்பாக, வடக்கு – கிழக்கு மாகாண பாடசாலைகளில் பொலிஸார் இராணுவத்தினர், அரச புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் இடம் பெற்றுவருவது தனிமனித சிந்தனை மற்றும் மனச் சாட்சி சுதந்திரங்களை நசுக்கும் அடிப்படை மனித உரிமை மீறல்களாகும்.

இலங்கை அரசின் சட்ட வரையறைக்குட்பட்டு கருத்தியல் ரீதியாகவும் – கலை ரீதியாகவும் – குறியீட்டு வடிவங்கள் மூலமாகவும் – சமூகம் சார் பிரக்ஞைகளை வெளிப்படுத்தும் போது, அதனை அரச இயந்திரங்களால் நசுக்கும் செயற்பாடுகள் நடைபெறுவதற்கு அனுமதிக்க முடியாது. இதற்கு கல்வி திணைக் களங்களும் துணைபோகுமானால், கல்விக்குள் இராணுவ மற்றும் பொலிஸ் தலையீடுகளை ஆதரிக்கும் செயல்பாடுகளாகவே இவை அமையும்.

அண்மையில், நடைபெற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வன்மை போட்டியின் இல்ல அலங்காரங்களில் மாணவர்கள் வெளிப்படுத்திய வெளிப்பாடுகள், இலங்கை அரசமைப்பில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான சிந்தனை மற்றும் மனச்சாட்சி சுதந்திரத்துக்கு உட்பட்டதாகும். இந்த விடயங்களில் பொலிஸாரோடு இணைந்து வடமாகாண கல்வி அமைச் சும் தலையீடு செய்வதென்பது மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல்பாடு என்பதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நிலைப்பாடாகும்.

இந்த விடயம் தொடர்பாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவி லும் முறைப்பாடு செய்யவுள்ளோம். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொருத்தமான விசாரணை களை மேற்கொண்டு நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் ஆசிரியா் சங்கம் தெரிவித்துள்ளது.